search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்மராஜன்"

    • முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் மற்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட புகழ்பெற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.
    • தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு தற்போது 65 வயதாகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்தவர் கே. பத்மராஜன். தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர் இதுவரை 238 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தற்போது 239-வது முறையாக தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    நான் டயர் பழுது பார்க்கும் கடை வைத்து நடத்தி வருகிறேன். முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், நரசிம்மராவ் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, கருணாநிதி, உள்ளிட்ட புகழ்பெற்றவர்களை எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்களிலும் 6 முறை போட்டியிட்டுள்ளேன். நான் வெற்றி பெற விரும்பவில்லை. தோல்வியை மட்டுமே அடைய வேண்டும். ஏனெனில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும். ஆனால் நீங்கள் என்றென்றும் இழப்பை அனுபவிக்க முடியும். மேலும் இதுவரை தேர்தலுக்காக சுமார் ரூ. 1 கோடி செலவழித்து உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு தற்போது 65 வயதாகிறது. இவர் லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் டெல்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் தேர்தல் வரலாற்றில் மிகவும் தோல்வி அடைந்த வேட்பாளர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

    தர்மபுரி எம்.பி. தொகுதியில் இன்று சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் மனு தாக்கல் செய்தார். 200-வது முறையாக போட்டியிடுகிறார்.
    தர்மபுரி:

    சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் 200-வது முறையாக தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்து உள்ளார்.

    தர்மபுரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான மலர்விழியிடம் அவர் மனு தாக்கல் செய்தார். தேர்தலில் போட்டியிடுவது குறித்து பத்மராஜன் கூறியதாவது:-

    நான் ஜனாதிபதி தேர்தல் உள்பட சட்டமன்ற தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளேன். முக்கிய தலைவர்களையும் எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன்.

    1988 முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன். முதல்-அமைச்சர் முதல், உள்ளூர் எம்.எல்.ஏ. வேட்பாளர் வரை அனைவரையும் எதிர்த்து போட்டியிட்டு உள்ளேன். இன்று 200-வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    ×