search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே விபத்து- மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் பலி
    X

    பெரம்பலூர் அருகே விபத்து- மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் பலி

    பெரம்பலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெரம்பலூர்:

    சென்னை வேளச்சேரி மற்றும் கோட்டூர்புரத்தை சேர்ந்தவர்கள் ராஜேஷ் குமார், ராஜா, விஜயக்குமார், வின்சன்ட் தேவன், ரோச் (வயது 45) ஆகிய 5 பேரும் நெல்லையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

    வின்சென்ட் தேவன் காரை ஓட்டிச்சென்றார். அந்த கார் நேற்று காலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே மங்களமேடு என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரோச் என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மங்களமேடு போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×