என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செஞ்சி அருகே கார்-டேங்கர் லாரி மோதல்- டிரைவர் பலி
Byமாலை மலர்17 Feb 2019 4:35 AM GMT (Updated: 17 Feb 2019 4:35 AM GMT)
செஞ்சி அருகே இன்று காலை கார், டேங்கர் லாரி மோதிய விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செஞ்சி:
சென்னையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது42). இவர் வாடகை கார் ஓட்டிவந்தார். நேற்று இரவு அவர் காரில் சவாரி ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை சென்றார்.
அங்கு ஆட்களை இறக்கி விட்டு மீண்டும் காரில் சென்னைக்கு புறப்பட்டார். இன்று காலை 6.30 மணி அளவில் அவர் வந்த கார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிகோட்டை காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு டேங்கர் லாரி ஒன்று சென்றது. காட்டு பகுதியில் உள்ள குண்டு-குழியான சாலையில் சென்றபோது காரும்-டேங்கர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த செந்தில்குமார் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும், செஞ்சி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காருக்குள் சிக்கி பிணமாக கிடந்த செந்தில்குமாரின் உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். கார்- டேங்கர் லாரி மோதிய விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது42). இவர் வாடகை கார் ஓட்டிவந்தார். நேற்று இரவு அவர் காரில் சவாரி ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை சென்றார்.
அங்கு ஆட்களை இறக்கி விட்டு மீண்டும் காரில் சென்னைக்கு புறப்பட்டார். இன்று காலை 6.30 மணி அளவில் அவர் வந்த கார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிகோட்டை காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது செஞ்சியில் இருந்து திருவண்ணாமலைக்கு டேங்கர் லாரி ஒன்று சென்றது. காட்டு பகுதியில் உள்ள குண்டு-குழியான சாலையில் சென்றபோது காரும்-டேங்கர் லாரியும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த செந்தில்குமார் அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும், செஞ்சி போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காருக்குள் சிக்கி பிணமாக கிடந்த செந்தில்குமாரின் உடலை மீட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். கார்- டேங்கர் லாரி மோதிய விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X