என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருக்காரவாசல் கிராமத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கிராம மக்கள் போராட்டம்
Byமாலை மலர்1 Feb 2019 4:05 AM GMT (Updated: 1 Feb 2019 4:05 AM GMT)
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் கிராம மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஊராட்சியை மையமாக வைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்து விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே திருக்காரவாசல் கிராம மக்கள் கடந்த 26-ந் தேதி குடியரசு தினம் முதல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தினர்.
காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கீழ்வேளுர் தி.மு.க. எம்.எல்.ஏ., மதிவாணன், காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க பி.ஆர். பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் திட்டம் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டம் ஆகும். தற்போது திருக்காரவாசலில் மட்டும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படவேண்டும். இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்குள் வருவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஊராட்சியை மையமாக வைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு வேதாந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பிற்கு திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்து விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே திருக்காரவாசல் கிராம மக்கள் கடந்த 26-ந் தேதி குடியரசு தினம் முதல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். 5-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தினர்.
காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கீழ்வேளுர் தி.மு.க. எம்.எல்.ஏ., மதிவாணன், காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்க பி.ஆர். பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் கூறியதாவது:-
ஹைட்ரோ கார்பன் திட்டம் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் திட்டம் ஆகும். தற்போது திருக்காரவாசலில் மட்டும் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்படவேண்டும். இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழகத்திற்குள் வருவதை தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X