search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் கலெக்டர் படத்துடன் டிக்-டாக் வீடியோ - மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
    X

    சேலம் கலெக்டர் படத்துடன் டிக்-டாக் வீடியோ - மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

    சேலம் கலெக்டர் ரோகிணியின் படங்களுடன் உள்ள டிக்-டாக் மியூசிக்கை வெளியிட்ட மர்மநபர்கள் ஓரிரு நாளில் கைது செய்யப்படுவார்கள் என சைபர் கிரைம் போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். #TikTak #SalemCollector
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ரோகிணி. இவரது போட்டோக்களை வைத்து மர்ம நபர்கள் சிலர் சினிமா பாடல்கள் மூலம் டிக்-டாக் செயலியில் பதிவு செய்துள்ளனர்.

    இதில் கலெக்டர் ரோகிணியின் படங்கள் மற்றும் அவரது மகன் படங்களை சேர்த்த மர்ம நபர்கள் அதனை வாட்ஸ்-அப், பேஸ் புக், டிக்-டாக் மியூசிக், டுவிட்டர்களிலும் பதிவிட்டுள்ளனர்.

    இந்த படங்கள் வாட்ஸ்-அப், பேஸ் புக்கிலும் வேகமாக பரவியது. இதனை பார்த்த கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.



    மேலும் கலெக்டர் ரோகிணியின் படங்களுடன் உள்ள டிக்-டாக் மியூசிக்கை தடை செய்யும் பணியில் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    தொடர்ந்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யும் பணியிலும் அவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். எப்படியாவது ஓரிரு நாளில் மர்மநபர்கள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.

    ஏற்கனவே பல்வேறு அரசியல் கட்சியினர் டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் கலெக்டர் படத்தை டிக்-டாக் செயலியில் பதிவு செய்து வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #TikTak #SalemCollector

    Next Story
    ×