search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானம்- ரெயில் பயணிகளுக்காக  மெட்ரோ ரெயில் காலை 4.30 முதல் இரவு11மணி வரை ஓடும்
    X

    விமானம்- ரெயில் பயணிகளுக்காக மெட்ரோ ரெயில் காலை 4.30 முதல் இரவு11மணி வரை ஓடும்

    விமானம் மற்றும் ரெயில் நிலைய பயணிகள் வசதிக்காக விரைவில் மெட்ரோ ரெயில் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும் விரைவு பயணத்துக்காவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை- விமான நிலையம் வரை உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம் - சென்ட்ரல், சைதாப்பேட்டை-டி.எம்.எஸ். வரை சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை தற்போது நடந்து வருகிறது. டி.எம்.எஸ். -வண்ணாரப்பேட்டை வரை விரைவில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது.

    தற்போது மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மீனப்பாக்கத்தில் உள்ள உள்நாடு, வெளிநாடு விமான நிலையம் மற்றும் எழும்பூர், சென்ட்ரலில் உள்ள எக்ஸ்பிரஸ் நிலையங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிகாலையில் வருகின்றனர். இந்த பயணிகளை கவரும் வகையில் மெட்ரோ ரெயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    விமானம் ரெயில் நிலைய பயணிகள் வசதிக்காக விரைவில் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் போக்குவரத்து சேவை நீட்டிக்கப்பட உள்ளது.

    இது குறித்து விரைவில் முறைப்படி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிடும் என தெரிகிறது. #MetroTrain
    Next Story
    ×