என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இளம்பெண்களுடன் உல்லாசம்: விடுதி உரிமையாளரிடமிருந்து ஆபாச சி.டி.க்கள் பறிமுதல்
Byமாலை மலர்6 Dec 2018 7:32 AM GMT (Updated: 6 Dec 2018 7:32 AM GMT)
ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரத்தில் கைதான உரிமையாளரிடமிருந்து ஆபாச சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #AdambakkamHostel
ஆலந்தூர்:
ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் கண்ணுக்கு தெரியாத வகையில் சிறிய ரக ரகசிய கேமராக்களை பொருத்திய விடுதி உரிமையாளர் சஞ்சீவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியை சேர்ந்த சஞ்சீவுக்கு திருமணமாகி பள்ளியில் படிக்கும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகவே அவர் செக்ஸ் மன்னனாக வலம் வந்துள்ளார். விடுதியை நடத்துவதற்கு முன்னர் கட்டுமான நிறுவனம் ஒன்றை சஞ்சீவ் நடத்தி வந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய பெண்கள் பலரை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். அப்படி செக்ஸ் சுகம் அனுபவித்த போது அப்பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்று வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோக்களை சி.டி.யாகவும் சஞ்சீவ் பதிவு செய்து வைத்திருந்தார். இதனை காட்டியே மீண்டும் மீண்டும் பல பெண்களை ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
விடுதியில் பொருத்திய கேமரா தொடர்பாக ஏதாவது வீடியோ காட்சிகள் கிடைக்குமா? என்பது பற்றி சஞ்சீவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கட்டுமான அதிபராக இருந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சிக்கின. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சி.டி.யில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அந்த சி.டி.யில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலர் இருந்தனர். சஞ்சீவ் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாட்ஸ்-அப் குழு ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.
இந்த குழு மூலம் ஆபாச படங்களை சஞ்சீவ் வாட்ஸ்- அப்பில் பரப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்துச் செல்லப்பட்ட போது சஞ்சீவ் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். அவரது காலில் முறிவு ஏற்பட்டது போன்று காணப்பட்டது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்துவிட்டதால் காலில் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சஞ்சீவியின் லீலைகள் வெளியில் வருவதற்கு புதுவையை சேர்ந்த பேராசிரியை ஒருவரே முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர்தான் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி மூலமாக இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் கெங்கைராஜ் ஆகியோரது மேற்பார்வையில் ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி சஞ்சீவை கைது செய்தனர். #AdambakkamHostel
ஆதம்பாக்கத்தில் உள்ள பெண்கள் விடுதியில் கண்ணுக்கு தெரியாத வகையில் சிறிய ரக ரகசிய கேமராக்களை பொருத்திய விடுதி உரிமையாளர் சஞ்சீவ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியை சேர்ந்த சஞ்சீவுக்கு திருமணமாகி பள்ளியில் படிக்கும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாகவே அவர் செக்ஸ் மன்னனாக வலம் வந்துள்ளார். விடுதியை நடத்துவதற்கு முன்னர் கட்டுமான நிறுவனம் ஒன்றை சஞ்சீவ் நடத்தி வந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய பெண்கள் பலரை தனது வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்துள்ளார். அப்படி செக்ஸ் சுகம் அனுபவித்த போது அப்பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்று வீடியோ எடுத்துள்ளார்.
இந்த வீடியோக்களை சி.டி.யாகவும் சஞ்சீவ் பதிவு செய்து வைத்திருந்தார். இதனை காட்டியே மீண்டும் மீண்டும் பல பெண்களை ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
விடுதியில் பொருத்திய கேமரா தொடர்பாக ஏதாவது வீடியோ காட்சிகள் கிடைக்குமா? என்பது பற்றி சஞ்சீவிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கட்டுமான அதிபராக இருந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சிக்கின. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சி.டி.யில் பதிவான காட்சிகளை போட்டு பார்த்த போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அந்த சி.டி.யில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலர் இருந்தனர். சஞ்சீவ் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாட்ஸ்-அப் குழு ஒன்றையும் தொடங்கி இருக்கிறார்.
இந்த குழு மூலம் ஆபாச படங்களை சஞ்சீவ் வாட்ஸ்- அப்பில் பரப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அது தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இதற்கிடையே கோர்ட்டில் ஆஜர் படுத்த அழைத்துச் செல்லப்பட்ட போது சஞ்சீவ் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். அவரது காலில் முறிவு ஏற்பட்டது போன்று காணப்பட்டது.
இதுபற்றி போலீசார் கூறும்போது, தப்பி ஓட முயன்றபோது தவறி விழுந்துவிட்டதால் காலில் முறிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சஞ்சீவியின் லீலைகள் வெளியில் வருவதற்கு புதுவையை சேர்ந்த பேராசிரியை ஒருவரே முக்கிய காரணமாக இருந்துள்ளார். அவர்தான் தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி மூலமாக இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து பரங்கிமலை துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர் கெங்கைராஜ் ஆகியோரது மேற்பார்வையில் ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி சஞ்சீவை கைது செய்தனர். #AdambakkamHostel
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X