search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 7 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. #MetturDam
    சேலம்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    நேற்று 8 ஆயிரத்து 800 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 11 ஆயிரத்து 402 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 7 ஆயிரத்து 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 103.61 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 103.71 அடியாக இருந்தது. இனி வரும் நாட்களில் நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. #MetturDam
    Next Story
    ×