search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி விமர்சனம்- எச்.ராஜா மீது காஞ்சீபுரம் போலீஸ் வழக்கு
    X

    அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி விமர்சனம்- எச்.ராஜா மீது காஞ்சீபுரம் போலீஸ் வழக்கு

    தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி விமர்சித்து பேசிய எச்.ராஜா மீது காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #HRaja #BJP
    காஞ்சீபுரம்:

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி விமர்சித்து பேசினார்.

    இதனை கண்டித்து காஞ்சீபுரம் மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி மற்றும் ஊழியர்கள் கடந்த மாதம் 18-ந் தேதி காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம், எச்.ராஜா மீது புகார் மனு அளித்தனர்.

    அதில், அறநிலையத்துறை அதிகாரிகள் பற்றி தரக்குறைவாக பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதையடுத்து புகாரின் அடிப்படையில் இன்று காலை காஞ்சீபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது அறநிலையத்துறை அதிகாரிகளை அவதூறாக பேசியதாக (294-3ன்) படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #HRaja #BJP
    Next Story
    ×