search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்தில் சேதமான பொருட்கள்.
    X
    தீ விபத்தில் சேதமான பொருட்கள்.

    மேட்டூரில் டிரைவர் வீடு தீப்பிடித்து எரிந்தது- பொருட்கள் எரிந்து சேதம்

    மேட்டூரில் இன்று அதிகாலை டிரைவர் வீடு தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதம் ஆனது.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தூக்கனாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். டிரைவராக இருந்து வருகிறார்.

    இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் இவரது வீடு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென்று பற்றி எரிந்தது. இதைப்பார்த்து தூங்கிக் கொண்டிருந்த செந்தில்குமாரும் அவரது குடும்பத்தினரும் திடுக்கிட்டு எழுந்து அலறி அடித்தபடி வெளியே ஓடி வந்தனர்.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த டி.வி., கட்டில், பிரிட்ஜ் என அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சேதம் ஆனது.

    தீ விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாமா? அல்லது வேறு எதும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×