search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடற்பயிற்சி செய்த காட்சி
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடற்பயிற்சி செய்த காட்சி

    சேலம் அனுப்பூரில் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து பயிற்சி செய்த முதல்வர்

    சேலம் அனுப்பூரில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து உடற்பயிற்சி செய்தார். #EdappadiPalaniswami
    சேலம்:

    சேலம் அனுப்பூர் ஊராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து அங்கு உடற்பயிற்சியும் செய்தார்.

    விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி

    பின்னர் விழாவில் பேசிய அவர்,  சேலம் மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    ‘நானும் விவசாயி தான், விவசாயம் எவ்வளவு கடினமான தொழில் என்பதையும், விவசாயிகள் வாழ்வில் எவ்வளவு துன்பம் என்பதையும் நான் நன்கு அறிவேன். விவசாயிகள் நலனை மேம்படுத்த அரசு எப்போதும் துணை நிற்கும். கிராமங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.’ என்றும் முதலமைச்சர் பேசினார். #EdappadiPalaniswami
    Next Story
    ×