search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.
    X
    தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடந்த காட்சி.

    ஈரோட்டில் இன்று சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. #DMKprotest
    ஈரோடு:

    ஈரோடு தெற்கு மாவட்ட தி.முக சார்பில் கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமை தாங்கினார்.

    தெற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான முத்துசாமி, மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி. பா. சச்சிதானந்தம், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகு மார், மாநகர செயலாளர் சுப்பிரமணியம்,

    மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் பழனிச்சாமி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.இ. பிரகாஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கோட்டை ராமு, கோட்டை பகுதி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ‘வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழக அரசே வஞ்சிக்காதே’, ‘திரும்ப பெறு திரும்ப பெறு சொத்து வரி உயர்வை திரும்ப பெறு’ ஆகிய கோ‌ஷங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

    பின்னர் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வீட்டு வரி, வாடகை வீட்டு வரி, குப்பை வரி, தண்ணீர் வரி என இந்த அரசு வரலாறு காணாத அளவில் வரிகளை உயர்த்தி வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த அரசு கையாளாகாத அரசாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.

    உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் தி.மு.க. வெற்றி பெறும் என்ற பயம் காரணமாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இந்த அரசு சாக்கு போக்கு சொல்லி வருகிறது.

    உள்ளாட்சி நிர்வாகம் முடங்கியதால் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய ரூ.3 ஆயிரத்து 500 கோடி வரவில்லை. சொத்து வரி உயர்வை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம் அறிவித்ததும் சொத்து வரியை 50 சதவீதமாக குறைத்துள்ளனர்.
     
    ஆனால் சொத்து வரி உயர்வை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். ஒரு டெண்டர் எடுத்தால் அதன் மதிப்பு ரூ. 5 கோடி என்றால் இவர்கள் ரூ. 7 கோடியாக கணக்கு காட்டி அதன்மூலம் ரூ. 2 கோடி கொள்ளை அடிக்கிறார்கள். இப்படி இந்த அரசு ஊழல் நிறைந்த அரசாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #DMKprotest

    Next Story
    ×