என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிரியர்கள் குரல் கேட்டு உயிர் பிழைத்த மாணவர்
Byமாலை மலர்19 July 2018 11:11 PM GMT (Updated: 19 July 2018 11:11 PM GMT)
ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற மாணவர், ஆசிரியர்கள் குரல் கேட்டு உயிர் பிழைத்த மாணவர் நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மின்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 17). கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி மாலை, நண்பர்களுடன் பானிபூரி சாப்பிட்டார்.
அப்போது, மூச்சடைத்து மயங்கி விழுந்த அருண் பாண்டியன், அதே ஊரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நாடித்துடிப்பு மிகக்குறைவாக இருந்ததால், டாக்டர்கள் அறிவுறுத்தல்படி, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே, தகவல் அறிந்த அருண் பாண்டியனின் பள்ளி ஆசிரியர்கள் மணிகண்டன், சோமசுந்தரம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அருண் பாண்டியனை கண்டு கலங்கிய இருவரும், அவரது காது அருகே சென்று “தம்பி விழித்து பார்யா... யார் வந்திருக்கிறது என்று” என அடுத்தடுத்து பேச்சு கொடுத்தனர்.
இதனால் அதுவரை அசைவற்று கிடந்த அருண் பாண்டியன் கண்கள் லேசாக உருள தொடங்கியது. ஆசிரியர்கள் பேசப்பேச அவர் கண் விழித்தார். கை, கால்களை அசைத்தார். அடுத்த 7 நிமிடங்களில் சுயநினைவு திரும்பி, “சார் நீங்க எப்ப வந்தீங்க” என்று கேட்டார். ஆசிரியர்களின் பெயரையும் சரியாக கூறினார். அதைப் பார்த்த டாக்டர்களும், செவிலியர்களும் 10 சதவீதம் கூட உணர்வு இல்லாமல் இருந்த அருண் பாண்டியன் உயிர் பிழைத்ததை நினைத்து ஆனந்தம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை மின்னாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 17). கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 17-ந் தேதி மாலை, நண்பர்களுடன் பானிபூரி சாப்பிட்டார்.
அப்போது, மூச்சடைத்து மயங்கி விழுந்த அருண் பாண்டியன், அதே ஊரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். நாடித்துடிப்பு மிகக்குறைவாக இருந்ததால், டாக்டர்கள் அறிவுறுத்தல்படி, தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே, தகவல் அறிந்த அருண் பாண்டியனின் பள்ளி ஆசிரியர்கள் மணிகண்டன், சோமசுந்தரம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அருண் பாண்டியனை கண்டு கலங்கிய இருவரும், அவரது காது அருகே சென்று “தம்பி விழித்து பார்யா... யார் வந்திருக்கிறது என்று” என அடுத்தடுத்து பேச்சு கொடுத்தனர்.
இதனால் அதுவரை அசைவற்று கிடந்த அருண் பாண்டியன் கண்கள் லேசாக உருள தொடங்கியது. ஆசிரியர்கள் பேசப்பேச அவர் கண் விழித்தார். கை, கால்களை அசைத்தார். அடுத்த 7 நிமிடங்களில் சுயநினைவு திரும்பி, “சார் நீங்க எப்ப வந்தீங்க” என்று கேட்டார். ஆசிரியர்களின் பெயரையும் சரியாக கூறினார். அதைப் பார்த்த டாக்டர்களும், செவிலியர்களும் 10 சதவீதம் கூட உணர்வு இல்லாமல் இருந்த அருண் பாண்டியன் உயிர் பிழைத்ததை நினைத்து ஆனந்தம் அடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X