search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டை அருகே டெய்லர் வெட்டிக் கொலை
    X

    ஜோலார்பேட்டை அருகே டெய்லர் வெட்டிக் கொலை

    ஜோலார்பேட்டை அருகே பழிக்கு பழியாக டெய்லரை வெட்டிக் கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பாய்ச்சல் ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் தம்புராஜ் மகன் முனிராஜ் (வயது34).

    கடந்த ஆண்டு இவரது நண்பர் ஒருவர் அதே கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை கடத்தி சென்று விட்டார். அதற்கு முனிராஜ் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் இளம்பெண்ணின் உறவினர்களுக்கும் முனிராஜூக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த ஆண்டு முனிராஜை ஊரின் எல்லையில் வழி மறித்து அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் சுதீஷ் (24) உள்பட 6 பேர் கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

    இது தொடர்பாக சுதீஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சுதீஷ் கடத்தப்பட்ட இளம்பெண்ணின் உறவினராவார்.

    இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுதீஷ் உள்பட 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். விடுதலையான சுதீஷ் திருப்பூரில் தங்கி அங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் டெய்லராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரான பாய்ச்சலுக்கு வந்தார். இதையறிந்த முனிராஜின் தம்பி கார்த்தி (24) கடந்த 10-ந்தேதி நடந்த முனிராஜின் திதி வழிபாட்டில் அண்ணனை கொன்றவர்களை பழி வாங்குவதாக சபதம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் சுதீஷ் நேற்று மாலை திருப்பத்தூரில் இருந்து பைக்கில் ஜோலார்பேட்டை ராஜீவ்காந்தி மைதானம் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முனிராஜின் தம்பி கார்த்திக் உள்பட 5 பேர் கும்பல் அவரை வழி மறித்து சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் தலை, கழுத்து, கை என பல இடங்களில் பலத்த வெட்டுக்காயமடைந்த சுதீஷ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.

    இதையடுத்து கார்த்தி உள்பட 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதை பார்த்த அங்குள்ளவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுதீசை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சுதீஷ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, சிவா ஆகியோரை கைது செய்தார். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    Next Story
    ×