search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tailor murder"

    • கறிக்கடையில் வேலை பார்த்து வந்த முகமது ரசூலுக்கும், பாபுவிற்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
    • கொலை வழக்கு தொடர்பாக முகமது ரசூல் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார்.

    சென்னை முகப்பேர் மேற்கு 3-வது பிளாக் பஞ்சமுக சிவன் கோவில் தெருவில் டெய்லர் கடையில் வேலை செய்த பாபு என்பவர் 2017-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கை, கால்கள் என பல துண்டுகளாக வெட்டப்பட்டு வீசப்பட்டன.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட பாபுவின் கடைக்கு எதிரே கறிக்கடையில் வேலை பார்த்து வந்த முகமது ரசூலுக்கும் (28) பாபுவிற்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறில் இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து முகமது ரசூலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் முகமது ரசூல் ஜாமினில் வெளியே வந்தார். கொலை வழக்கு தொடர்பாக அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தார். 2019-ம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

    இதையடுத்து நொளம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையில் போலீசார் முகமது ரசூலை 4 ஆண்டுக்கு பிறகு கூடுவாஞ்சேரி அருகே கைது செய்தனர்.

    • பழனி அடிவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர்.
    • சிலர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது, தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு சொந்த மாநிலங்களுக்கு தப்பி செல்கின்றனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அருகே காந்திநகர் பகுதியில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஜெயந்த் சம்மந்தா (வயது34) என்பவர் தனியாக வீடு எடுத்து தறி மற்றும் டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவருடன் மேலும் 4 வடமாநில தொழிலாளர்கள் அந்த வீட்டில் தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் வடமாநில தொழிலாளர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மற்றவர்கள் ஜெயந்த் சம்மந்தா மீது கோபத்தில் இருந்தனர்.

    நேற்று இரவும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கத்தியால் ஜெயந்த் சம்மந்தாவை சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதனைத் தொடர்ந்து 4 வடமாநில தொழிலாளர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர். சம்பவம் குறித்து அறிந்ததும் பழனி டி.எஸ்.பி. சிவசக்தி தலைமையில் போலீசார் விரைந்து சென்று ஜெயந்த் சம்மந்தாவின் உடலை கைப்பற்றி பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய 4 பேரை தேடி வருகின்றனர்.

    பழனி அடிவாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடிப்பது, தனியாக செல்லும் பெண்களிடம் நகை பறிப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு சொந்த மாநிலங்களுக்கு தப்பி செல்கின்றனர்.

    தற்போது கொலை செய்து விட்டு வடமாநில தொழிலாளர்கள் 4 பேரும் அவர்கள் சொந்த மாநிலத்துக்கு தப்பி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த சம்பவம் பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    களக்காடு அருகே தையல்காரரை தலை துண்டித்து கொன்ற வழக்கில் அண்ணன், தம்பி ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
    ஆலங்குளம்:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் ஆல்பர்ட் செல்வகுமார்(வயது40). தையல் தொழிலாளியான இவர் வள்ளியூரில் ஒரு தையல் கடையில் வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 6-ந்தேதி தனது ஊரில் நின்றபோது அதே பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரிடம் மணி என்பவரது மகன்கள் பொன்இசக்கி(27), இசக்கி முத்து(23) ஆகியோர் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தனர். அதற்கு மாயக் கிருஷ்ணன் மறுத்தார். அப்போது ஆல்பர்ட் செல்வகுமார், மாயகிருஷ்ணனுக்கு ஆதரவாக பேசி பொன் இசக்கியையும், இசக்கி முத்தையும் கண்டித்தார்.

    இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் அன்று இரவில் ஆல்பர்ட் செல்வகுமாரின் வீட்டுக்கு பொன் இசக்கி, இசக்கிமுத்து ஆகிய இருவரும் வந்தனர். அவர்கள் மோட்டார்சைக்கிளில் ஆல்பர்ட் செல்வகுமாரை அழைத்துச்சென்றனர். அதன் பின்னர் வெகு நேரமாகியும் ஆல்பர்ட் செல்வகுமார் வீடு திரும்பி வரவில்லை.

    இதனால் ஆல்பர்ட் செல்வகுமாரை அவரது வீட்டில் தேடினார்கள். இதனிடையே அப்பகுதியில் உள்ள பச்சையாறு கரையில் ஆல்பர்ட் செல்வகுமார் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தது மறுநாள் (7-ந்தேதி) கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பொன் இசக்கியும், இசக்கி முத்துவும் சேர்ந்து ஆல்பர்ட் செல்வகுமாரை கொலை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் தேடினர். ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    ஆகவே அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று தேடி வந்தனர். பொன்இசக்கி தூத்துக்குடியில் டிரைவராக வேலை பார்த்ததால் தூத்துக்குடியில் பதுங்கி இருக்கலாம் என்று கருதி தனிப்படை போலீசார் அங்கும் சென்று தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் பொன் இசக்கி, அவரது தம்பி இசக்கி முத்து ஆகிய இருவரும் ஆலங்குளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பிச்சைராஜன் முன்னிலையில் இன்று சரண் அடைந்தனர். #tamilnews
    ஜோலார்பேட்டை அருகே பழிக்கு பழியாக டெய்லரை வெட்டிக் கொலை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த பாய்ச்சல் ஜெய்பீம் நகரை சேர்ந்தவர் தம்புராஜ் மகன் முனிராஜ் (வயது34).

    கடந்த ஆண்டு இவரது நண்பர் ஒருவர் அதே கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணை கடத்தி சென்று விட்டார். அதற்கு முனிராஜ் உடந்தையாக இருந்துள்ளார். இதனால் இளம்பெண்ணின் உறவினர்களுக்கும் முனிராஜூக்கும் முன் விரோதம் ஏற்பட்டது.

    இதையடுத்து கடந்த ஆண்டு முனிராஜை ஊரின் எல்லையில் வழி மறித்து அதே கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் சுதீஷ் (24) உள்பட 6 பேர் கத்தியால் வெட்டி கொலை செய்தனர்.

    இது தொடர்பாக சுதீஷ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சுதீஷ் கடத்தப்பட்ட இளம்பெண்ணின் உறவினராவார்.

    இந்நிலையில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சுதீஷ் உள்பட 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகியுள்ளனர். விடுதலையான சுதீஷ் திருப்பூரில் தங்கி அங்குள்ள ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் டெய்லராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரான பாய்ச்சலுக்கு வந்தார். இதையறிந்த முனிராஜின் தம்பி கார்த்தி (24) கடந்த 10-ந்தேதி நடந்த முனிராஜின் திதி வழிபாட்டில் அண்ணனை கொன்றவர்களை பழி வாங்குவதாக சபதம் செய்துள்ளார்.

    இந்த நிலையில் சுதீஷ் நேற்று மாலை திருப்பத்தூரில் இருந்து பைக்கில் ஜோலார்பேட்டை ராஜீவ்காந்தி மைதானம் வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது முனிராஜின் தம்பி கார்த்திக் உள்பட 5 பேர் கும்பல் அவரை வழி மறித்து சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் தலை, கழுத்து, கை என பல இடங்களில் பலத்த வெட்டுக்காயமடைந்த சுதீஷ் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார்.

    இதையடுத்து கார்த்தி உள்பட 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதை பார்த்த அங்குள்ளவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சுதீசை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் சுதீஷ் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் வழக்குப்பதிவு செய்து கார்த்தி, சிவா ஆகியோரை கைது செய்தார். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

    இச்சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×