search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் வடமாநில வாலிபர் குத்திக்கொலை- கொள்ளை கும்பல் வெறிச்செயல்
    X

    திருப்பூரில் வடமாநில வாலிபர் குத்திக்கொலை- கொள்ளை கும்பல் வெறிச்செயல்

    திருப்பூரில் வடமாநில வாலிபரை கொள்ளை கும்பலால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிரமோத் மாஞ்சில் (24). இவர் திருப்பூர் வஞ்சிப்பாளையத்தில் உள்ள ஹாலோபிளாக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று விடுமுறை என்பதால் பிரமோத் மாஞ்சில் தனது நண்பருடன் கடைக்கு சென்றார். இரவு அவர்கள் திரும்பி கொண்டு இருந்தனர். வஞ்சிப்பாளையம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பிரமோத் மாஞ்சிலை கத்தி முனையில் மிரட்டி பணத்தை தருமாறு கேட்டனர். அதற்கு பிரமோத் மாஞ்சில் தன்னிடம் பணம் இல்லை என கூறினார்.

    இதனால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் பிரமோத் மாஞ்சில் நண்பரை அங்கிருந்த சிறிய பாலத்தில் இருந்து தள்ளி விட்டனர்.

    இதனை பிரமோத் மாஞ்சில் தட்டி கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு உருவானது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் தாங்கள் கொண்டு வந்த கூர்மையான ஆயுதத்தால் பிரமோத் மாஞ்சிலை குத்தினார்கள். அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே பிணமானார்.

    பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். தன் கண் முன் பிரமோத் மாஞ்சில் கொலை செய்யப்பட்டதை பார்த்த அவரது நண்பர் அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தனது சக நண்பர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் அனுப்பர்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் அங்கு வந்து பிரமோத் மாஞ்சில் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரமோத் மாஞ்சிலை குத்தி கொன்ற 2 பேர் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக அவரது நண்பரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருப்பூரில் வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×