என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீர்பிடிப்பு பகுதியில் கனமழை - பெரியாறு அணையில் ஒரே நாளில் 1 அடி உயர்வு
Byமாலை மலர்13 July 2018 4:37 AM GMT (Updated: 13 July 2018 4:37 AM GMT)
நீர்பிடிப்பு பகுதியில் கன மழை தொடருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கோடை மழை கைகொடுத்த நிலையில் பருவமழை ஏமாற்றி வந்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்துகொண்டே வந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் முதல் போகத்திற்கு முழுவதும் தண்ணீர் கிடைக்குமா? என சந்தேகம் இருந்தது.
தற்போது நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 3598 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 124.30 அடியாக இருந்தது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி 125.30 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் இருந்து 1367 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 48.20 அடியாக உள்ளது. 891 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.01 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 52.2, தேக்கடி 42.2, கூடலூர் 9.8, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 4.4, கொடைக்கானல் 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையில் இருந்து சாரல் மழை பெய்ததால் அணையின் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப்பகுதியில் உள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
கோடை மழை கைகொடுத்த நிலையில் பருவமழை ஏமாற்றி வந்ததால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்துகொண்டே வந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். மேலும் முதல் போகத்திற்கு முழுவதும் தண்ணீர் கிடைக்குமா? என சந்தேகம் இருந்தது.
தற்போது நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து 3598 கன அடியாக உயர்ந்துள்ளது. நேற்று அணையின் நீர்மட்டம் 124.30 அடியாக இருந்தது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி 125.30 அடியாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1 அடி உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் இருந்து 1367 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 48.20 அடியாக உள்ளது. 891 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 960 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 42 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 122.01 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 52.2, தேக்கடி 42.2, கூடலூர் 9.8, சண்முகாநதி அணை 4, உத்தமபாளையம் 4.4, கொடைக்கானல் 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது. இன்று காலையில் இருந்து சாரல் மழை பெய்ததால் அணையின் மேலும் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X