search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 5520 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன
    X

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 5520 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 5520 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.

    காஞ்சீபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 10 ஆயிரத்து 170 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.

    இந்த மின்னணு எந்திரங்கள் அதன் அடிப்படையில் பெங்களூரில் இருந்து இரண்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் 5520 புதிய வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. முதற்கட்டமாக கடந்த 16-ந் தேதி 4650 எந்திரங்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தது.

    இந்நிலையில் புதிய வாக்கு பதிவு எந்திரங்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார். வாக்கு பதிவு எந்திரங்கள் காஞ்சீபுரம் அரசு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது வருவாய் கோட்ட அலுவலர் ராஜூ, அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகி கே.யு.எஸ். சோமசுந்தரம், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜீவீ. மதியழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச் சந்திரன், தனி வட்டாட்சியர் சீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர். #Tamilnews

    Next Story
    ×