search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகத்தை வெட்டுவேன் என்றுதானே சொன்னேன்: நடிகர் மன்சூர் அலிகான்
    X

    நகத்தை வெட்டுவேன் என்றுதானே சொன்னேன்: நடிகர் மன்சூர் அலிகான்

    8 பேரை வெட்டுவேன் என்று சொல்லவில்லை, நகத்தை வெட்டுவேன் என்றுதானே சொன்னேன் என நடிகர் மன்சூர் அலிகான் உருக்கமாக தெரிவித்துள்ளார். #mansooralikhan #chennaitosalem8wayroad

    சேலம்:

    சேலம்-சென்னை இடையே பசுமை வழிசாலை அமைக்க விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் 8 வழிசாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தியும் சேலத்தில் நடிகர் மன்சூர் அலிகான் பேசினார். அப்போது அவர் 8 வழி சாலை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன் என பேசினார்.

    இதையடுத்து மன்சூர் அலிகானை கடந்த வாரம் தீவட்டிப்பட்டி போலீசார் சென்னையில் வைத்து கைது செய்தனர். பின்னர் அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயிலில் மன்சூர் அலிகான் நேற்று திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். காலை மற்றும் மதியம் உணவு சாப்பிடாமல் போராட்டம் நடத்தினார். அவரை சிறைத்துறை அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

    இதையடுத்து இரவில் மன்சூர் அலிகான் தனது உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு உணவு சாப்பிட்டார்.

    இதற்கிடையில் மன்சூர் அலிகான் ஜாமீன் கோருவது தொடர்பாக தனது வக்கீல் மாயனிடம் பேசினார். அப்போது அவர் பேசிய விபரம் வருமாறு:-

    சிறை டெலிபோனில் இருந்து மன்சூர் அலிகான் பேசுகிறேன். வெளியே எடுத்து விடுவீங்கல்ல? நான் பெயிலபிள்-னு சொல்றாங்க.

    வெட்டுவேன் என்றால் நகத்தை வெட்டுவேன், முடியை வெட்டுவேன், கொலை பண்ணுவோம்னா சொன்னேன்? சாதாரண வார்த்தை இது. இதுக்குபோய் டார்ச்சர் பண்றாங்க.

    நடிக்க விடாமல் பொழப்ப கெடுக்கறாங்க. கண்டிசன் போட்டு அங்க, இங்கன்னு அனுப்பினா நாசமாய் போய்விடுவேன். கண்டிசன் என்றாலும் கோடம்பாக்கம், தி.நகருன்னு கேளுங்க. எனக்கு பணம் இல்லை.

    குழந்தைகளுக்கு காலேஜில் கட்ட கூட பணம் இல்லாம இருக்கேன். எப்படியும் எடுத்துவிடுவீங்கல்ல? பார்த்துக்கோங்க தயவு செய்து. போட்டது போட்டப்படியே கெடக்கு. குழந்தைகளை காலேஜில் சேர்க்காம வந்துட்டேன். அப்படியே கிடக்கு. ரம்ஜான் பண்டிகை கூட கொண்டாடவில்லை. குழந்தைகளை வெளியே அழைத்து செல்வதாக கூறியிருந்தேன்.

    இவ்வாறு அவர் உருக்கமாக பேசியதாக வக்கீல் மாயன் தெரிவித்தார். #mansooralikhan #chennaitosalem8wayroad

    Next Story
    ×