என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வாளையர் அணையில் மூழ்கி கோவையை சேர்ந்த 3 பேர் பலி
கொழிஞ்சாம்பாறை:
கோவை மதுக்கரை பிச்சனூர் ரெங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 43). இவரது மகள் அமராவதி (16). பரமசிவத்தின் நண்பர் ராஜீவின் மகள் ரேஷ்மா (14). நேற்று இரவு இவர்கள் 3 பேரும் வாளையார் அணையில் குளிக்க சென்றனர்.
வெகுநேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அணையில் அவர்களை தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது துணிகள் மட்டும் கரையில் இருந்தன.
இது குறித்த வாளையார் போலீசார் மற்றும் கஞ்சிக்கோடு தீயணைப்பு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விளக்கு வெளிச்சத்தில் அணையில் இறங்கி தேடினர். நள்ளிரவு 12 மணி அளவில் 3 பேரும் அணையில் இருந்து பிணமாக மீட்கப்பட்டனர்.
அவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்