என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் பல்கலைக்கழக பதிவாளரிடம் விசாரணை
Byமாலை மலர்20 April 2018 10:19 AM GMT (Updated: 20 April 2018 10:19 AM GMT)
அதிகாரி சந்தானம் மதுரையில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
மதுரை:
கல்லூரி மாணவிகளை பாலியல் வலை விரித்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் மாணவிகளிடம் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப் மூலம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்தார்.
அதன் பேரில் அதிகாரி சந்தானம் மதுரையில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் நேற்று பல்கலைகக்கழகத்திற்கு சென்று இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை பெற்றார்.
இந்த நிலையில் இன்று மதுரை விசாலாட்சி புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி சின்னையா இன்று ஆஜரானார். காலை 11.45 மணி முதல் 12.45 மணி வரை ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சேகர், வேல்முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
சின்னையாவிடம் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. நிர்மலா தேவி விவகாரம் தொடர்புடைய ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சின்னையாவிடம் இருந்து பெற்றனர்.
கல்லூரி மாணவிகளை பாலியல் வலை விரித்த பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவர் மாணவிகளிடம் பேசிய ஆடியோ வாட்ஸ்-அப் மூலம் நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த கவர்னர் பன்வாரிலால் புரோகித், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் ஒரு நபர் கமிஷனை அமைத்தார்.
அதன் பேரில் அதிகாரி சந்தானம் மதுரையில் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லதுரை, பதிவாளர் சின்னையா ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் நேற்று பல்கலைகக்கழகத்திற்கு சென்று இந்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை பெற்றார்.
இந்த நிலையில் இன்று மதுரை விசாலாட்சி புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதன்படி சின்னையா இன்று ஆஜரானார். காலை 11.45 மணி முதல் 12.45 மணி வரை ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சேகர், வேல்முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.
சின்னையாவிடம் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. நிர்மலா தேவி விவகாரம் தொடர்புடைய ஆவணங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சின்னையாவிடம் இருந்து பெற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X