என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கருப்பசாமி பாண்டியன் மீண்டும் தி.மு.க.வில் சேர திட்டம்
Byமாலை மலர்21 Nov 2017 7:48 AM GMT (Updated: 21 Nov 2017 7:48 AM GMT)
கருப்பசாமி பாண்டியன் மீண்டும் தி.மு.க.வில் சேர்வதற்காக மூத்த தலைவர்கள் சிலர் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
நெல்லை:
நெல்லையை சேர்ந்த கருப்பசாமி பாண்டியன், அ.தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக இருந்த போது கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தி.மு.க.வில் சேர்ந்து நெல்லை மாவட்ட செயலாளராகவும், தென்காசியில் எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு பெற்று பணியாற்றினார்.
இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு தி.மு.க. உட்கட்சிதேர்தலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் ஜெயலலிதா ஜெயிலில் இருந்து வெளியே வந்த போது அவரது ஆதரவாளர்கள் வெடி வெடித்ததால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் கருப்பசாமி பாண்டியன் தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கருப்பசாமி பாண்டியன், ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு அ.தி.மு.க. (அம்மா) அணியில் கழக மாநில அமைப்பு செயலாளராக பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் கருப்பசாமி பாண்டியன் அந்த பதவி தேவையில்லை என்று கூறி அ.தி.மு.க.வில் எந்த அணியிலும் சேராமல் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி மரணம் அடைந்தார். அந்த துஷ்டி நிகழ்ச்சிக்கு சென்ற கருப்பசாமி பாண்டியனை தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர் மீண்டும் தி.மு.க.வில் சேர்த்தால் இணைந்து பணியாற்ற தயார் என்று கூறியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து மூத்த தலைவர்கள் தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் மு.க.ஸ்டாலின் இது குறித்து பதில் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் நெல்லை மாவட்ட தி.மு.க.வில் பல்வேறு கோஷ்டி பூசல்கள் இருந்து வந்ததால், மீண்டும் தி.மு.க.வில் கருப்பசாமி பாண்டியனை சேர்க்க தொடர்ந்து தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது.
நேற்று நெல்லை மேற்கு மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் சங்கரன் கோவில், தென்காசி வந்திருந்தார். அப்போதும் சில மூத்த தி.மு.க. நிர்வாகிகள் கருப்பசாமி பாண்டியனுடன் பேசி உள்ளனர்.
இதன் விளைவாக விரைவில் கருப்பசாமி பாண்டியன் தி.மு.க.வில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைவார் என்று கூறப்படுகிறது.
நெல்லையை சேர்ந்த கருப்பசாமி பாண்டியன், அ.தி.மு.க.வில் துணை பொதுச்செயலாளராக இருந்த போது கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவர் தி.மு.க.வில் சேர்ந்து நெல்லை மாவட்ட செயலாளராகவும், தென்காசியில் எம்.எல்.ஏ.வாகவும் தேர்வு பெற்று பணியாற்றினார்.
இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு தி.மு.க. உட்கட்சிதேர்தலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் ஜெயலலிதா ஜெயிலில் இருந்து வெளியே வந்த போது அவரது ஆதரவாளர்கள் வெடி வெடித்ததால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் கருப்பசாமி பாண்டியன் தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கருப்பசாமி பாண்டியன், ஜெயலலிதாவை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவருக்கு அ.தி.மு.க. (அம்மா) அணியில் கழக மாநில அமைப்பு செயலாளராக பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் கருப்பசாமி பாண்டியன் அந்த பதவி தேவையில்லை என்று கூறி அ.தி.மு.க.வில் எந்த அணியிலும் சேராமல் ஒதுங்கி இருந்தார்.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளர் பெரியசாமி மரணம் அடைந்தார். அந்த துஷ்டி நிகழ்ச்சிக்கு சென்ற கருப்பசாமி பாண்டியனை தி.மு.க. மூத்த தலைவர்கள் சிலர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அவர் மீண்டும் தி.மு.க.வில் சேர்த்தால் இணைந்து பணியாற்ற தயார் என்று கூறியதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து மூத்த தலைவர்கள் தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். ஆனால் மு.க.ஸ்டாலின் இது குறித்து பதில் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் நெல்லை மாவட்ட தி.மு.க.வில் பல்வேறு கோஷ்டி பூசல்கள் இருந்து வந்ததால், மீண்டும் தி.மு.க.வில் கருப்பசாமி பாண்டியனை சேர்க்க தொடர்ந்து தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது.
நேற்று நெல்லை மேற்கு மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் சங்கரன் கோவில், தென்காசி வந்திருந்தார். அப்போதும் சில மூத்த தி.மு.க. நிர்வாகிகள் கருப்பசாமி பாண்டியனுடன் பேசி உள்ளனர்.
இதன் விளைவாக விரைவில் கருப்பசாமி பாண்டியன் தி.மு.க.வில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைவார் என்று கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X