search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "join"

    • முன்னாள் துணை சபாநாயகர் வரகூர்அருணாசலம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்
    • தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செந்துறை தெற்கு ஒன்றியம் பாளையகுடி ஊராட்சி, வாளரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பா.ம.க. ஒன்றிய துணை தலைவர்வேலுசாமி,

    தே.மு.தி.க. ஒன்றிய இளை ஞரணி துணை செயலாளர் நல்லதம்பி உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வு மான தமிழ்ச்செல்வன் தலைமையில், அமைப்புச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர்அருணாசலம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    நிகழ்ச்சியில் செந்துறை தெற்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ் , பெரம்பலூர் நகர செயலாளர் ராஜபூபதி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மூவேந்தர் முன்னேற்றக்கழகத்தினர் 2 ஆயிரம் பேர் அண்ணாமலை முன்னிலையில் இன்று பா.ஜனதா கட்சியில் இணைகிறார்கள்.
    • சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி அறிக்கை கூறியிருந்தார்.

    பரமக்குடி

    மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நிர் வாகி சி.எம்.டி.ராஜாஸ் சேதுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா–வது:-

    கால் நூற்றாண்டு காலம் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அப்பழுக்கற்ற சமு–தாய பணியாற்றி காலத் தின் அருமை கருதி தமிழை–யும், தமிழினத்தையும், உலக–மெங்கும் பறைசாற்றும் பிரதமர் மோடி ஜி தலை–மையில் போலி திராவிட ஆட்சிக்கும், ஊழலுக்கும் அப்பழுக்கற்ற அரசியல் செய்யும் திருவண்ணா–மலை–யார் நாமம் கொண்ட அண்ணாமலை, 'என் மண், என் மக்கள்' யாத்திரை மூலம் மக்களுக்கு விழிப்பு–ணர்வை ஏற்படுத்தி வருகி–றார்.

    தமிழகம் முழுவதும் வரக் கூடிய யாத்திரை பயணத் தில் பரமக்குடியில் நானும், என்னுடன் இருக்க கூடிய மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் இணைந்து பசும்பொன் தேவரின் ஆன்மிகம், தேசி–யத் தையும் தெய்வீ–கத்தையும் இரு கண்களாக கொண்ட சித்தர் வழியில் ஆன்மிக பணியும் அரசியல் பணியும் தொடங்குவதற்கு தயாராகி 2 ஆயிரம் பேருடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைகி–றேன் என்பதை என்னுடன் இருப்பவர்களுக்கும் என் இன மக்களுக்கும் நண்பர்க–ளுக்கும் தெரிவித்து கொள் கிறேன்.

    இவ்வாறு அவர் தெரி–வித்துள்ளார்.

    • தனியார்‌ தொழிற்‌ பயிற்சி நிலையங்களில்‌ அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும்‌ www_skilltraining.tn.gov.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
    • பெண்‌ பயிற்சியாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்‌.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேரவும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்க ளுக்கு சேரவும் www_skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    இதில் வெல்டர், வயர்மேன் போன்ற பிரிவுக ளுக்கு 8-ம் வகுப்பிலும் எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், மோட்டார் மெக்கானிக், ஏ.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைக ளின் நவீன தொழில்நுட்பத் திற்கு ஏற்ப புதியதாக தொடங்க உள்ள டெக்னா லஜி சென்டர் 40-ல் மானு பாக்சரிங் பிராசஸ் கண்ட் ரோல் அண்ட் ஆட்டோ மேசன், இண்டஸ்ட்ரியல் ரோபாட்டிக்ஸ் அண்டு டிஜிட்டல் மானுபாக்சரிங், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள், அட்வான்ஸ்டு சி.என்.சி. மெஷினிங் டெக்னீசியன் போன்ற பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பி லும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், கைபேசி எண், மின்அஞ்சல், ஆதார் அட்டை, சாதிச்சான் றிதழ் மற்றும் முன்னுரிமை கோரினால் முன்னுரிமைச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சேலத்தில் உள்ள சேர்க்கை உதவி மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.50 ஆகும்.

    பயிற்சி பெறும் மாண வர்களுக்கு இலவசமாக சைக்கிள், சீருடை, பாடநூல், வரைபடக் கருவி, காலணி, பஸ் பாஸ், மாதாந்திர உதவித்தொகை ரூ.750 மற்றும் மூவலூர் ராமா மிர்தம் அம்மையார் நினைவு பெண்கள் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண் பயிற்சியாளர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், பயிற்சி முடித்த பின் முன்னனி நிறுவனங்களின் மூலம் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் வேலை பெற்றுத்தரப்படும்.

    இந்த பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க தேதி வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது என்று மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரிவித்துள்ளார்.

    • இந்திய ராணுவத்தில் தகுதியான, துடிப்பான இளைஞர்களை சேர்ப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
    • வருகிற செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    சேலம்:

    இந்திய ராணுவத்தில் தகுதியான, துடிப்பான இளைஞர்களை சேர்ப்பதற்காக மத்திய பா.ஜ.க. அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் அக்னி வீரர்கள் ஆள்சேர்ப்பு முகாம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள டி.இ.ஏ. பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற செப்டம்பர் மாதம் 20-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த திருப்பூர் மண்டலத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, நீலகிரி, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. இந்த மாவட்டங்களை சேர்ந்த ஆர்வம் உள்ள இளைஞர்கள் https://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 3-ந்தேதி வரை பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதிக்கு பிறகு அனுமதி கடிதம் வழங்கப்படும். இந்த ஆள்சேர்ப்பு முகாமில் ராணுவ பொதுப்பணிகள், தொழில் நுட்பப் பணிகள், ட்ரேட்ஸ்மேன், எழுத்தர், பணிமனை காப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்காக நடைபெறுகிறது.

    இப்பணியில் சேர வயது, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் முறை கடந்த 4-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவிகள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இணையதள முகவரியில் ஜூலை 7-ந்தேதி வரை பதிவு செய்யலாம்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புக்களான தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதவியல், வணிக நிர்வாகவியல், வணிகவியல் ஆகிய பட்டப் படிப்புகளுக்கு மாணவிகள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாணவிகள் விண்ணப்பங்களை www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதள முகவரியில் ஜூலை 7-ந்தேதி வரை பதிவு செய்யலாம்.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவிகள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப கட்டணம் ரூ.48 மற்றும் பதிவு கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டிய தில்லை. பதிவு கட்டணம் ரூ.2 மட்டும் செலுத்தினால் போதுமானது.

    இந்த கட்டணத்தை விண்ணப் பதாரர்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் இணையதளம் வாயிலாக செலுத்தலாம் என கல்லூரி முதல்வர் சின்னத்தாய் தெரிவித்துள்ளார்.

    • பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் வரும் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை விண்ணப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இந்த கல்லூரியில் அமைப்பியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணிணி பொறி யியல் என 5 முழுநேரப் பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் ரூ.150 பதிவுக்கட்டணமாக கிரிடிட் கார்டு, டேபிட் கார்டு,நெட் பேங்க் மூலம் செலுத்தலாம். பழங்குடி-பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக்கட்டணம் இல்லை.

    முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணை யான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நேரடி 2-ம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பி யல், வேதியியல், கணிதம், உயிரியல் அல்லது தொழில் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்து இருக்க வேண்டும்.

    இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    ×