என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கட்சியின் நலனுக்காகவே ஏ.கே.போஸ் கருத்து தெரிவித்தார்: ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி
மதுரை:
மதுரை புதூரில் உள்ள அம்மா உணவகத்தில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 12 அம்மா உணவகங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளையும் மீறி அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மதுரையில் வளர்ச்சித் திட்ட பணிகள் சிறப்பாக செயல்படுகின்றன.
திருமங்கலத்தில் நேற்று நடந்த அ.திமு.க. பொதுக் கூட்டத்தில் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அவர் யாரையும் பெயர் குறிப்பிட்டு பேசவில்லை. அ.தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க. ஆட்சிக்கும் யாரும் குந்தகம் விளைவித்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஈடுபடுபவர்கள் பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். எனவே பதவி ஆசை பற்றி ஏ.கே.போஸ் குறிப்பிட்டுள்ளார். அதே மேடையில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசும்போது இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டு தொடர்ந்து நீடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்டவாறு ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
பேட்டியின்போது நிர்வாகிகள் அண்ணாதுரை, முருகன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், கார்த்திக் முனியசாமி, கண்ணன், மகாதேவன், வினுவர்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்