என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நடுகடலில் மீன் பிடித்தபோது படகில் மின்சாரம் தாக்கி மீனவர் பலி
Byமாலை மலர்2 Oct 2017 11:35 AM GMT (Updated: 2 Oct 2017 11:35 AM GMT)
நடுகடலில் மீன் பிடித்தபோது படகில் மின்சாரம் தாக்கி மீனவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:
திருவொற்றியூர் புதுமண குப்பத்தைச் சேர்ந்தவர் விஜய். மீனவர். இவர் கடந்த 25-ந்தேதி படகில் சிலருடன் மீன் பிடிக்க சென்றார்.
கடலுக்குள் தங்கி மீன் பிடிப்பதற்காக தேவையான உணவு, தண்ணீர் மற்றும் வெளிச்சத்தை இன்வெட்டர் ஆகியவற்றை எடுத்து சென்று இருந்தனர்.
நேற்று ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபட்டினம் கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது விஜய் இன்வெட்டரை தொட்டபோது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அவரது உடலுடன் மீனவர்கள் காசிமேடு துறைமுகத்துக்கு வந்தனர். போலீசார் விஜய் உடலை கைப்பற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X