என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
மதுரையில் சுவர் இடிந்து விழுந்தது: மதுபார் ஊழியர்கள் 2 பேர் பரிதாப பலி
மதுரை:
மதுரை அண்ணாநகர் குருவிக்காரன் சாலையில் வைகை ஆற்றின் கரையோரம் தனியார் மதுபானக் கூடம் செயல்பட்டு வந்தது. இங்கு மேலாளராக பணியாற்றியவர் ரவீந்திரன் (வயது 52). துணை மேலாளராக இருந்தவர் ஜெயக்குமார் (50).
ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த மதுபானக்கூடம் சமீபத்தில் மூடப்பட்டது. இருப்பினும் அங்கு பணியாற்றிய ஊழியர்கள், மதுபானக்கூடத்தில் சில பராமரிப்பு பணிகளை செய்து வந்தனர்.
பணியில் ஈடுபட்ட ரவீந்திரன், ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை மதுபானக் கூடத்தின் வெளியே நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப்பகுதியில் புல்டோசர் மூலம் சிலர் ஆக்கிரமிப்பு மற்றும் குப்பைகளை அகற்றினர்.
இந்தப்பணியின் போது புல்டோசர் எதிர்பாராத விதமாக ரவீந்திரன் மற்றும் ஜெயக்குமார் நின்று கொண்டிருந்த இடத்தின் அருகே உள்ள சுவற்றில் இடிந்தது.. இதனால் அந்த ‘ஹாலோ பிளாக்’ சுவர் இடிந்து நொறுங்கியது. அதன் இடிபாடுகளுக்குள் ரவீந்திரனும், ஜெயக்குமாரும் சிக்கிக் கொண்டனர்.
இதனைக் கண்ட அக்கம், பக்கத்தினர் இடிபாடுகளை அகற்றி 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ரவீந்திரன் மற்றும் ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்