என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
காலாப்பட்டில் தனியார் நிறுவன காவலாளி தூக்குபோட்டு தற்கொலை
சேதராப்பட்டு:
புதுவை காலாப்பட்டு மேட்டு தெருவை சேர்ந்தவர் முருகையன் (வயது 44). இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
அங்குள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த முருகையன் தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். மது பழக்கத்தினால் கணவன் - மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் மது பழக்கத்தை மறக்க முருகையனை போதை மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்க முயற்சி செய்து வந்தனர். இதற்கு முருகையனும் சம்மதம் தெரிவித்து இருந்தார்.
இன்று காலை முருகையனை போதை மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்க இருந்த நிலையில் மது பழக்கத்தை மறக்க முடியாமல் நேற்று இரவு வீட்டு தோட்டத்தில் உள்ள முந்திரி மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்