என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை திருச்சியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் - தமிழிசை அறிவிப்பு
Byமாலை மலர்8 Sep 2017 2:42 PM GMT (Updated: 8 Sep 2017 2:42 PM GMT)
தமிழகத்தில் எதிர்க்கட்சியினரின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை திருச்சி உழவர் சந்தை திடலில் பா.ஜ.க. தரப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
சென்னை:
நீட் தேர்வுக்கு எதிராக இன்று திருச்சி தென்னூர் உழவர் சந்தை திடலில் எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. பொதுக்கூட்ட திடலுக்கு கட்சி தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களை அனுமதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், திருச்சி பொதுக்கூட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை காவல்துறை ரத்து செய்தது. எனினும் தடையை மீறி திட்டமிட்டபடி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழகத்தில் எதிர்க்கட்சியினரின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை திருச்சி உழவர் சந்தை திடலில் பா.ஜ.க. தரப்பில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை இன்று மாலை அவர் வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நீட் தேர்வு அனாவசியமாக அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் நீட் தேர்வில் எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை மருத்துவ இடங்கள் கிடைத்திருக்கிறது என்பது வெளியாகி உள்ளது. பின்தங்கிய மாவட்டங்களில் கூட அதிக இடங்கள் கிடைத்திருக்கிறது. சமூகநீதியும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. மாவட்டங்களுக்கு கிடைத்த அங்கீகாரம், கிராமப்புற மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் மாணவர்களை குழப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை (09.09.2017) பா.ஜ.க. சார்பில் திருச்சியில் உள்ள உழவர் சந்தை திடலில் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் எதிர்மறை பிரச்சாரத்தை முறியடிக்கவே இக்கூட்டம். நீட் தேர்வில் உள்ள உண்மை நிலையை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறவே இக்கூட்டம். இதில் பா.ஜ.க. தொண்டர்களும், பொது மக்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X