என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சிங்கையில் மர்ம காய்ச்சலுக்கு ராணுவ வீரர் மகள் பலி
சிங்கை:
நெல்லை மாவட்டம் சிங்கை ஜார்ஜ் புரத்தை சேர்ந்தவர் மாரியப்பன், ராணுவ வீரர். இவரது மனைவி சீதாலட்சுமி. இவர்களுக்கு கனகவேல் (வயது10) என்ற மகனும், தரணி (7) என்ற மகளும் இருந்தனர். தரணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாள். பின்னர் உடல்நலம் தேறியதையடுத்து சிறுமி வீடு திரும்பினாள். இந்நிலையில் நேற்று மாலை மீண்டும் தரணிக்கு உடல்நிலை குறை ஏற்பட்டு பரிதாபமாக இறந்தாள்.
இதே போல் தரணியின் அண்ணன் கனகவேலுக்கும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணன் -தங்கைக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதா? என டாக்டர்கள் ரத்த மாதிரிகளை கொண்டு பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
சிறுவர்-சிறுமிகளை தாக்கி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்