என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடியோ:ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் - ரகசியத்தை உடைத்தார் டோனி
Byமாலை மலர்21 May 2019 4:27 AM GMT (Updated: 21 May 2019 4:27 AM GMT)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி, தனது ஓய்வுக்கு பின்னர் ஓவியராக விரும்புவதாக ரகசியத்தை உடைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டோனி, ஓய்வுக்கு பின்னர் தான் என்ன செய்யப்போகிறார் என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார். இது குறித்து வெளியிட்ட வீடியோவில் டோனி கூறியிருப்பதாவது:
சிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு சிறந்த ஓவிய கலைஞர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. நான் கிரிக்கெட் பயிற்சியில் கவனம் அதிகம் செலுத்தியபோதிலும், ஓவியம் தீட்டுவதை விடவில்லை. நான் வரைந்த சில ஓவியங்களை உங்களிடம் காட்ட விரும்புகிறேன்.
நான் எனது முதல் ஓவிய கண்காட்சியை துவக்க பணிகள் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு சில காலம் ஆகும். அதற்கு முன் எனது ஓவியங்களை உங்களுக்கு காட்டுகிறேன். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். நான் ஓவிய கலை துறைக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
எனது அனைத்து ஓவியங்களையும் பாருங்கள். அவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் என்னிடம் கூறுங்கள். அதனை ஏற்று, நான் செய்ய தயாராக இருக்கிறேன். நான் நடத்தவுள்ள ஓவிய கண்காட்சிக்கு அனைவரும் வர வேண்டும் என விரும்புகிறேன்.
எனது இந்த வீடியோவை காண வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை தனது விருப்ப ஓவியமாக காண்பித்தார். இதில் ஒரு சிறுவன் கைகளில் பந்து, பேட் ஆகியவற்றை வைத்து கொண்டு வெற்றி அடைந்த சந்தோஷத்தை வெளிப்படுத்துவது போல தீட்டியுள்ளார். மேலும் அச்சிறுவன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிற ஆடை, தொப்பி ஆகியவை அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X