search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐபிஎல் 2019: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்- மே 12-ல் நடக்கிறது
    X

    ஐபிஎல் 2019: இறுதிப் போட்டி சென்னையில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம்- மே 12-ல் நடக்கிறது

    ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து ஐதராபாத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. #IPL2019 #CSK #SRH
    ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது இடம் பெற்றது.

    இதனால் நடப்பு சாம்பியன் அணிக்கு சொந்தமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான் இறுதிப் போட்டி நடத்தப்படுவதாக இருந்தது. சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மூன்று கேலரிகள் அனுமதி விவகாரத்தால் பயன்படாமல் இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது.



    இந்நிலையில் ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிளே-ஆப்ஸ்’ போட்டிகள் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. ஐதராபாத்தில் மே 12-ந்தேதி இறுதிப் போட்டி நடக்கிறது.
    Next Story
    ×