என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவுன்ஸ்-க்கு ஒத்துழைக்கும் பெர்த்தில் நாதன் லயன் மகிழ்ச்சியாக பந்து வீசுவார்: ஆரோன் பிஞ்ச்
Byமாலை மலர்14 Dec 2018 1:06 PM GMT (Updated: 14 Dec 2018 1:06 PM GMT)
பவுன்சருக்கு ஒத்துழைக்கும் பெர்த்தில் நாதன் லயன் மிகவும் மகிழ்ச்சியாக பந்து வீசுவார் என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. தொடக்கத்தில் ஆடுகளம் பெரிய அளவில் பந்து வீச்சுக்கு உதவவில்லை. இதை சரியாக பயன்படுத்தி தொடக்க வீரர்களான ஆரோன் பிஞ்ச், ஹாரிஸ் அரைசதம் அடித்தனர்.
அதன்பின் ஆடுகளத்தில் அதிக அளவில் பந்து பவுன்ஸ் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா தடுமாற ஆரம்பித்தது. டிராவிஸ் ஹெட் அரைசதம் அடிக்க ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. ‘பவுன்ஸ் பிட்ச்’ ஆன பெர்த்தில் இது சிறப்பான ஸ்கோர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை எப்படியும் இந்தியா பேட்டிங் செய்யும். அப்போது பவுன்ஸ்க்கு உதவும் ஆடுகளத்தில் நாதன் லயன் மகிழ்ச்சியாக பந்து வீசுவார் என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘பெர்த் டெஸ்ட் தற்போது இரு அணிகளுக்கு சமமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் நாங்கள் முன்னணியில் இருந்தோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது முக்கியமானது.
ஆடுகளம் அதிக அளவில் பவுன்ஸ்க்கு ஒத்துழைப்பதால் நாதன் லயன் மகிழ்ச்சியாக பந்து வீசுவார். இந்த ஆடுகளத்தில் அவர் உற்சாகமாக பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றார்.
அதன்பின் ஆடுகளத்தில் அதிக அளவில் பந்து பவுன்ஸ் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா தடுமாற ஆரம்பித்தது. டிராவிஸ் ஹெட் அரைசதம் அடிக்க ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. ‘பவுன்ஸ் பிட்ச்’ ஆன பெர்த்தில் இது சிறப்பான ஸ்கோர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை எப்படியும் இந்தியா பேட்டிங் செய்யும். அப்போது பவுன்ஸ்க்கு உதவும் ஆடுகளத்தில் நாதன் லயன் மகிழ்ச்சியாக பந்து வீசுவார் என்று ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘பெர்த் டெஸ்ட் தற்போது இரு அணிகளுக்கு சமமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. முதல் நாள் ஆட்டத்தில் தொடக்கத்தில் நாங்கள் முன்னணியில் இருந்தோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது முக்கியமானது.
ஆடுகளம் அதிக அளவில் பவுன்ஸ்க்கு ஒத்துழைப்பதால் நாதன் லயன் மகிழ்ச்சியாக பந்து வீசுவார். இந்த ஆடுகளத்தில் அவர் உற்சாகமாக பந்து வீச்சாளர் என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X