search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனாவிற்கு எதிராக டிரா- நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது டோட்டன்ஹாம்
    X

    சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனாவிற்கு எதிராக டிரா- நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது டோட்டன்ஹாம்

    சாம்பியன்ஸ் லீக்கில் பார்சிலோனாவிற்கு எதிரான ஆட்டத்தை 1-1 என டிரா செய்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது டோட்டன்ஹாம் #Barcelona
    சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் ‘பி’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் பார்சிலோனா - டோட்டன்ஹாம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஏற்கனவே பார்சிலோனா நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. டோட்டன்ஹாம் வெற்றி அல்லது டிரா செய்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற நிலையில் களம் இறங்கியது.

    ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ஓஸ்மானே டெம்பேல் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பார்சிலோனா முதல்பாதி நேரத்தில் 1-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேரத்திலும் டோட்டன்ஹாம் அணியால் நீண்ட நேரம் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 85-வது நிமிடத்தில்தான் லூகாஸ் மவுரா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது. பின்னர் ஆட்டம் முடியும்வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    பார்சிலோனா நான்கு வெற்றி, இரண்டு டிராவுடன் 14 புள்ளிகள் பெற்று நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது. டோட்டன்ஹாம், இன்டர் மிலன் அணிகள் 6 போட்டிகளில் தலா இரண்டு வெற்றி, டிரா, தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்றது. கோல் அடித்தது, கோல் விட்டுக் கொடுத்ததிலும் சமமாக இருந்தது. அவர்களுக்கிடையிலான ஆட்டத்தை கணக்கிட்டு டோட்டன்ஹாம் 2-வது இடம் பிடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
    Next Story
    ×