என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
6 சிக்சருடன் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான சாதனையை பதிவு செய்தார் குருணால் பாண்டியா
Byமாலை மலர்21 Nov 2018 9:48 AM GMT (Updated: 21 Nov 2018 9:48 AM GMT)
பிரிஸ்பேன் போட்டியில் 6 சிக்சருடன் 55 ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 3-வது இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை குருணால் பாண்டியா படைத்துள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்தியா பும்ரா, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளருடனும், குல்தீப் யாதவ், குருணால் பாண்டியா ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளருடனும் களம் இறங்கியது.
பும்ரா, புவி, குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசிய போதிலும் குருணால் பாண்டியா, கலீல் அகமது பந்தை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விளாசினார்கள். கலீல் அகமது 3 ஓவரில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதில் மூன்று சிக்சர் அடங்கும்.
குருணால் பாண்டியா 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 3-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்த வருடம் செஞ்சூரியனில் சாஹல் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஜோகிந்தர் சர்மா 2007-ல் டர்பனில் இங்கிலாந்திற்கு எதிராக 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 2-வது இடத்தில் உள்ளார். குருணால் பாண்டியா 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.
பும்ரா, புவி, குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்து வீசிய போதிலும் குருணால் பாண்டியா, கலீல் அகமது பந்தை ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விளாசினார்கள். கலீல் அகமது 3 ஓவரில் 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதில் மூன்று சிக்சர் அடங்கும்.
குருணால் பாண்டியா 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த 3-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்த வருடம் செஞ்சூரியனில் சாஹல் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து முதல் இடத்தில் உள்ளார். ஜோகிந்தர் சர்மா 2007-ல் டர்பனில் இங்கிலாந்திற்கு எதிராக 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 2-வது இடத்தில் உள்ளார். குருணால் பாண்டியா 55 ரன்கள் விட்டுக்கொடுத்து 3-வது இடத்தில் உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X