என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடைசி டி20 போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்
Byமாலை மலர்5 Nov 2018 7:41 AM GMT (Updated: 5 Nov 2018 8:07 AM GMT)
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தது. #PAKvNZ
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தது. #PAKvNZ
பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி துபாயில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. பாபர் ஆசம் 58 பந்தில் 79 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) முகமது ஹபீஸ் 34 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து 16.5 ஓவரில் 119 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் 2 ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் அதிகபட்சமாக 38 பந்தில் 60 ரன் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். சதாப் கான் 3 விக்கெட்டும் இமாத் வாசிம், வகாஸ் மசூத் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். நியூசிலாந்து அணி இந்த தொடரில் 3 போட்டியிலும் தோற்று ஏமாற்றம் அடைந்தது.
பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி துபாயில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. பாபர் ஆசம் 58 பந்தில் 79 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) முகமது ஹபீஸ் 34 பந்தில் 53 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் விளையாடிய நியூசிலாந்து 16.5 ஓவரில் 119 ரன்னில் சுருண்டது. இதனால் பாகிஸ்தான் 47 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் 2 ஆட்டத்தில் அந்த அணி வெற்றி பெற்று இருந்தது. தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
நியூசிலாந்து அணியில் கேப்டன் வில்லியம்சன் அதிகபட்சமாக 38 பந்தில் 60 ரன் (8 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். சதாப் கான் 3 விக்கெட்டும் இமாத் வாசிம், வகாஸ் மசூத் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். நியூசிலாந்து அணி இந்த தொடரில் 3 போட்டியிலும் தோற்று ஏமாற்றம் அடைந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X