search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி குல்தீப் யாதவ் சாதனை
    X

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி குல்தீப் யாதவ் சாதனை

    மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை குல்தீப் யாதவ் பெற்றுள்ளார். #INDvWI #KuldeepYadav
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 181 ரன்னில் சுருண்டது. அஸ்வின் நான்கு விக்கெட்டும், குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பாலோ-ஆன் ஆனதால் வெஸ்ட் இண்டீஸ் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. குல்தீப் யாதவின் அபார பந்து வீச்சால் 196 ரன்னில் சுருண்டது. குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    முதன்முறையாக ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ், மூன்று வகை கிரிக்கெட்டிலும் ஐந்து விக்கெடடுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார். இந்த சாதனையைப் படைத்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் புவனேஸ்வர் குமார் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
    Next Story
    ×