search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரொனால்டோ மீது பாலியல் புகார்- யுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு
    X

    ரொனால்டோ மீது பாலியல் புகார்- யுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு

    ரொனால்டோ பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கியதால், யுவாடன்ஸின் பங்கு 5 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. நைக் கவலையடைந்துள்ளது. #Ronaldo #Juventus
    போர்ச்சுக்கல் கால்பந்து அணியின் கேப்டனாக இருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் தலைசிறந்த வீரரான இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு மாறினார். சுமார் 9 ஆண்டு காலம் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடினார்.

    இவரது தலைமையில் ரியல் மாட்ரிட் வெற்றிமேல் வெற்றிகளை குவித்தது. இந்நிலையில் இந்த சீசனில் இருந்து இத்தாலியின் முன்னணி அணியான யுவான்டஸ்க்கு மாறினார். ரொனால்டோ யுவான்டஸ் வந்ததும் யுவான்டஸ் அணியின் மதிப்பு அதிகரித்தது.



    இந்நிலையில்தான் ஜெர்மனி பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவைச் சேர்ந்த மயோர்கா கேத்ரின் ரொனால்டோ தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து வெளியில் சொல்லக்கூடாது என்பதற்காக பணம் ஒப்பந்தம் முறையில் கொடுக்கப்பட்டது என்றார்.

    இதனால் ரொனால்டோ வழக்கை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளார். ரொனால்டோ யுவான்டஸ் அணியில் சேரும்போது அந்த அணியின் பங்கு அதிக அளவில் உயர்ந்தது. தற்போது ரொனால்டோ பிரச்சனையில் சிக்கியதால் யுவான்டஸ் அணியின் பங்கு 5 சதவீதம் சரிந்தது. அதேபோல் பலகோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ள நைக் நிறுவனமும் கவலையடைந்துள்ளது.
    Next Story
    ×