என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜய் ஹசாரே டிராபி- 10 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தி நதீம் சாதனை
Byமாலை மலர்20 Sep 2018 8:09 AM GMT (Updated: 20 Sep 2018 8:09 AM GMT)
இந்தியாவில் நடைபெறும் லிஸ்ட் ‘ஏ’ போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சுழற்பந்து வீச்சாளர் நதீம் சாதனைப் படைத்துள்ளார். #VijayHazareTrophy
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ராஜஸ்தான் - ஜார்க்கண்ட் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் ஒன்பது ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. 10-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நதீம் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் கவுதம் என்ற தொடக்க வீரரை 17 ரன்னில் வீழ்த்தினார். 14-வது ஓவரின் கடைசி பந்தில் லம்பா என்ற மற்றொரு தொடக்க வீரரை 20 ரன்னில் வீழ்த்தினார்.
அதன்பின் தொடர்ந்து விக்கெட்டுக்களை அள்ளிக்கொண்டே இருந்தார். தொடர்ச்சியாக 10 ஓவர்கள் வீசிய நதீம் 4 மெய்டன் ஓவர்களுடன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்.
இவரது பந்து வீச்சால் ராஜஸ்தான் 28.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 73 ரன்னில் சுருண்டது. பின்னர் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜார்க்கண்ட் 14.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இழக்கை எட்டியது.
10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் லிஸ்ட் ‘ஏ’ போட்டியில் குறைந்த ரன்கள் கொடுத்து அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ராகுல் சங்வி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி முதல் ஒன்பது ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. 10-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நதீம் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் கவுதம் என்ற தொடக்க வீரரை 17 ரன்னில் வீழ்த்தினார். 14-வது ஓவரின் கடைசி பந்தில் லம்பா என்ற மற்றொரு தொடக்க வீரரை 20 ரன்னில் வீழ்த்தினார்.
அதன்பின் தொடர்ந்து விக்கெட்டுக்களை அள்ளிக்கொண்டே இருந்தார். தொடர்ச்சியாக 10 ஓவர்கள் வீசிய நதீம் 4 மெய்டன் ஓவர்களுடன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்.
இவரது பந்து வீச்சால் ராஜஸ்தான் 28.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 73 ரன்னில் சுருண்டது. பின்னர் 74 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜார்க்கண்ட் 14.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இழக்கை எட்டியது.
10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதன் மூலம் இந்தியாவில் நடைபெறும் லிஸ்ட் ‘ஏ’ போட்டியில் குறைந்த ரன்கள் கொடுத்து அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ராகுல் சங்வி 15 ரன்கள் விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X