search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்சினாட்டி ஓபன்- ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்
    X

    சின்சினாட்டி ஓபன்- ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

    அமெரிக்காவில் நடைபெற்று வந்த சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச் #Federer #Djokovic
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 2-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர், 10-ம் நிலை வீரரான நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 4-6, 4-6 என ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

    பெண்களுக்கான இறுதிப் போட்டியில் 1-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் தரநிலை பெறாத கிகி பெர்ட்டென்ஸ்-ஐ எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை சிமோனா ஹாலெப் 6-2 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டில் பெர்ட்டென்ஸ் கடுமையான அளவில் பதிலடி கொடுத்தார். இரண்டு பேரும் மாறிமாறி கேம்ஸை கைப்பற்ற ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது.



    இறுதியில் கிகி பெர்ட்டென்ஸ் 7(8) - 6(6) என சிமோனா ஹாலெப்பை வீழ்த்தினார். இதனால் 1-1 என இருவரும் சமநிலை பெற்றதால் போட்டியின் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டை கைப்பறியே ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு களம் இறங்கினார்கள்.

    ஆனால் சிமோனா ஹாலெப் 2-6 என எளிதில் சரணடைந்தார். இதனால் பெர்ட்டென்ஸ் 2-6, 7(8) - 6(6), 6-2 என வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்.
    Next Story
    ×