search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கிய பான்கிராப்ட் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார்
    X

    பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கிய பான்கிராப்ட் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார்

    பால் டேம்பரிங் விவகாரத்தில் சிக்கி 9 மாதம் தடைபெற்ற ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடுகிறார்.
    ஆஸ்திரேலியா கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. கேப்டவுனில் நடைபெற்ற போட்டியின்போது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரிய வந்தது. இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அவருக்கு 9 மாதம் தடைவிதித்துள்ளது.



    இந்த தடை டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஜனவரி மாதம் முதல் அவர் சர்வதேச போட்டியில் பங்கேற்கலாம். இந்நிலையில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும் துர்காம் அணியுடன் பான்கிராப்ட் ஒப்பந்தம் செய்துள்ளார். அவர் மூன்று வகை கிரிக்கெட்டிலும் 2019 சீசனில் துர்காம் அணிக்காக விளையாட இருக்கிறார்.

    பான்கிராப்ட் ஆஸ்திரேலயாவின் தேசிய அணிக்காக 8 டெஸ்ட், ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.
    Next Story
    ×