search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டு போட்டி- கால்பந்து போட்டியில் இருந்து விலகியது ஈராக்
    X

    ஆசிய விளையாட்டு போட்டி- கால்பந்து போட்டியில் இருந்து விலகியது ஈராக்

    ஆசிய விளையாட்டு போட்டிக்கான கால்பந்து தொடரில் இருந்து ஈராக் விலகியுள்ளது. ஏற்கனவே பிலிப்பைன்ஸ் கூடைப்பந்து அணியை அனுப்ப மறுத்துவிட்டது. #AsianGames2018
    ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேசியால் வருகிற 18-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் கால்பந்து உள்பட 58 விளையாட்டுக்கள் இடம்பிடித்துள்ளன.

    கால்பந்து தொடரில் 6 பிரிவுகளில் 24 அணிகள் இடம்பிடித்திருந்தது. அதன்பின் பாலஸ்தீனம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கால்பந்து போட்டியில் இருந்து விலகுவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈராக் இடம் பிடித்திருந்த பிரிவில் சீனா, சிரியா மற்றும் டிமோர்-லெஸ்டே அணிகள் இடம்பிடித்துள்ளன.

    ஏற்கனவே பிலிப்பைன்ஸ் அணி கூடைப்பந்து அணியை அனுப்ப மறுத்துவிட்டது.
    Next Story
    ×