என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து தொடரை இந்தியா 2-1 என கைப்பற்ற வாய்ப்புள்ளது- ராகுல் டிராவிட் கணிப்பு
Byமாலை மலர்31 July 2018 2:43 PM GMT (Updated: 31 July 2018 2:43 PM GMT)
இங்கிலாந்து தொடரை இந்தியா 2-1 என கைப்பற்ற வாய்ப்புள்ளதாக, இங்கிலாந்தில் மண்ணில் தொடரை வென்ற ராகுல் டிராவிட் கணித்துள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த தொடரை இந்தியா கைப்பற்ற அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில் இங்கிலாந்து அணியும் மல்லுக்கட்ட தயாராகி வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்று சாதித்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் இந்தியா இந்த முறை தொடரை 2-1 எனத் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘இந்த தொடரின் முக்கியம்சமே, சூழ்நிலைக்கு ஏற்றபடி விரைவாக எப்படி மாறிக் கொள்கிறோம் என்பதுதான். நாம் 2007-ம் ஆண்டு தொடரை கைப்பற்றும்போது, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர். நாம் தோல்வியுடன் தொடரை தொடங்க இயலாது. ஆனால் தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என்பதால், கொஞ்சம் நேரம் கிடைக்கும்.
இந்திய அணிக்கு சிறப்பான வாய்ப்புள்ளதாக நினைக்க தோன்றுகிறது. ஆனால், முக்கியமாக 20 விக்கெட்டுக்களை பந்து வீச்சாளர்கள் வீழ்த்த வேண்டும். நாம் நல்ல ஸ்கோர் அடிப்போம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பந்து வீச்சாளர்கள் ஃபிட் ஆக இருக்க வேண்டியது அவசியம். நாம் இளம் பந்து வீச்சாளர்களை கொண்டிருந்தாலும், 6 வாரத்தில் ஐந்து டெஸ்ட் விளையாட வேண்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியா 2-1 வெற்றி பெற வாய்ப்புள்ளது’’ என்றார்.
இந்நிலையில் இங்கிலாந்து மண்ணில் தொடரை வென்று சாதித்த இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் தடுப்புச் சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் இந்தியா இந்த முறை தொடரை 2-1 எனத் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘இந்த தொடரின் முக்கியம்சமே, சூழ்நிலைக்கு ஏற்றபடி விரைவாக எப்படி மாறிக் கொள்கிறோம் என்பதுதான். நாம் 2007-ம் ஆண்டு தொடரை கைப்பற்றும்போது, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர். நாம் தோல்வியுடன் தொடரை தொடங்க இயலாது. ஆனால் தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் என்பதால், கொஞ்சம் நேரம் கிடைக்கும்.
இந்திய அணிக்கு சிறப்பான வாய்ப்புள்ளதாக நினைக்க தோன்றுகிறது. ஆனால், முக்கியமாக 20 விக்கெட்டுக்களை பந்து வீச்சாளர்கள் வீழ்த்த வேண்டும். நாம் நல்ல ஸ்கோர் அடிப்போம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பந்து வீச்சாளர்கள் ஃபிட் ஆக இருக்க வேண்டியது அவசியம். நாம் இளம் பந்து வீச்சாளர்களை கொண்டிருந்தாலும், 6 வாரத்தில் ஐந்து டெஸ்ட் விளையாட வேண்டியுள்ளது. இந்த தொடரில் இந்தியா 2-1 வெற்றி பெற வாய்ப்புள்ளது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X