search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிய விளையாட்டு போட்டி ஜோதி தொடர் ஓட்டம் டெல்லியில் தொடங்கியது
    X

    ஆசிய விளையாட்டு போட்டி ஜோதி தொடர் ஓட்டம் டெல்லியில் தொடங்கியது

    இந்தோனேசியாவில் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் ஆசிய விளையாட்டு போட்டி ஜோதியை ஏந்திச் செல்லும் தொடர் ஒட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.
    புதுடெல்லி :

    இந்தோனேசியாவின் ஜகர்த்தா மற்றும் பலேம்பங்க் ஆகிய இடங்களில் ஆசிய விளையாட்டு ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. போட்டி நடைபெறுவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு போட்டிக்கான ஜோதி ஏற்றப்பட்டு தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்லப்படும்.

    அங்குள்ள முன்னாள் இன்னாள் வீரர்கள் வீராங்கனைகள் ஜோதியை ஏந்திச் செல்வார்கள். போட்டியின் தொடக்க விழா நிகழ்சியின்போது பெரிய ஜோதி ஏற்றிவைக்கப்படும்.

    இந்திய ஒலிம்பிக் சங்கம் இந்தோனேசியா ஆசிய விளையாட்டு போட்டிக்கான கமிட்டியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. அதில் முதன்முறையாக ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்ற இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து ஜோதி பேரணி நடைபெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டிற்கான ஜோதியை கொண்டு செல்லும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் விளையட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஸ்ரீஜேஷ் மற்றும் பிற விளையாட்டு பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
    Next Story
    ×