என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசியா போட்டியில் தென்கொரியா - வடகொரியா வீரர்கள் இணைந்து விளையாடுகிறார்கள்
Byமாலை மலர்18 Jun 2018 11:52 AM GMT (Updated: 18 Jun 2018 11:52 AM GMT)
இருநாடுகளுக்கு இடையிலான நட்புணர்வை மேம்படுத்தும் வகையில் ஆசிய போட்டியில் கொரியா வீரர்கள் இணைந்து களம் இறங்குகிறார்கள். #AsianGames
தென்கொரியாவில் சமீபத்தில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. இதில் வடகொரியா கலந்து கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்தது. இருநாட்டு உயர்அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட, ஐஸ் ஹாக்கி அணிகள் வடகொரியா, தென்கொரியா இணைந்து களம் இறங்கும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இருநாட்டு வீரர்களும் ஒரே கலர் ஜெர்சி அணிந்து விளையாடினார்கள். அத்துடன் வடகொரியா அதிபர் தனது தங்கையை தென்கொரியா அனுப்பி வைத்திருந்தார்.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் நடைபெற்றது. இதனால் தென்கொரியா - வடகொரியா இடையிலான சுமூகமான உறவு மேம்படும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வரை இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தா மற்றும் பலேம்பங்கில் ஆசிய போட்டி நடைபெறுகிறது.
இதில் இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்களும் இணைந்து விளையாட இருநாடுகளும் விரும்பியது. இதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அப்போது இருநாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இணைந்து விளையாட சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் கொரியா கூடைப்படைந்து தொடர் வடகொரியாவில் நடைபெறுகிறது. இதில் தென்கொரியா அணி கலந்து கொண்டு விளையாட சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பேச்சுவார்த்தை சிங்கப்பூரில் நடைபெற்றது. இதனால் தென்கொரியா - வடகொரியா இடையிலான சுமூகமான உறவு மேம்படும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 2-ந்தேதி வரை இந்தோனேசியாவில் உள்ள ஜகர்தா மற்றும் பலேம்பங்கில் ஆசிய போட்டி நடைபெறுகிறது.
இதில் இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்களும் இணைந்து விளையாட இருநாடுகளும் விரும்பியது. இதற்கான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. அப்போது இருநாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இணைந்து விளையாட சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் கொரியா கூடைப்படைந்து தொடர் வடகொரியாவில் நடைபெறுகிறது. இதில் தென்கொரியா அணி கலந்து கொண்டு விளையாட சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X