search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெஸ்டின் முதல் நாளில் உணவு இடைவேளைக்குள் சதமடித்த முதல் இந்திய வீரர் தவான்
    X

    டெஸ்டின் முதல் நாளில் உணவு இடைவேளைக்குள் சதமடித்த முதல் இந்திய வீரர் தவான்

    டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளைக்குள் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் பெற்றார். #INDvAFG #Onlyonetest #ShikharDhawan
    பெங்களூரு:

    இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரகானே, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முரளி விஜய், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

    இந்திய அணியின் தொடக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தவானின் ஆட்டத்தில் அனல் பறந்தது. அவர் ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை விளாசி தள்ளினார். 47 பந்தில் அவர் அரை சதத்தை தொட்டார்.

    தொடர்ந்து சிறப்பாக ஆடிய தவான், மதிய உணவு இடைவேளைக்கு முன்பு சதம் அடித்தார். 87 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் 100 ரன்னை தொட்டார். 30-வது டெஸ்டில் விளையாடும் தவானுக்கு இது 7-வது சதமாகும்.



    மதிய உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து ஆடிய தவான் 96 பந்துகளில் 107 ரன்களில் யாமின் அகமத் ஜாய் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

    இந்த போட்டியில் ஷிகர் தவான் விரைவாக சதமடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் உணவு இடைவேளைக்குள் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

    ஏற்கனவே, ஆஸ்திரேலிய வீரர்கள் விக்டர் டிரம்பர் (1902), சார்லி மெக்கார்ட்னி (1921), டான் பிராட்மேன் (1930), டேவிட் வார்னர் (2017) மற்றும் பாகிஸ்தான் வீரர் மஜித் கான் (1976) ஆகியோர் உணவு இடைவேளைக்குள் சதமடித்த மற்ற வீரர்களாவர். #INDvAFG #Onlyonetest ##ShikharDhawan
    Next Story
    ×