search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயர்லாந்து இத்தாலியில் இந்திய குத்துச் சண்டை வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சி
    X

    அயர்லாந்து இத்தாலியில் இந்திய குத்துச் சண்டை வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சி

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக செயல்பட இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அயர்லாந்து மற்றும் இத்தாலியில் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
    இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் ஆகஸ்ட் மாதம் ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறுகின்றன. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய குத்துச் சண்டை சங்கம் ஆர்வம் காட்டியுள்ளது. இதனால் வீராங்கனைகள் இத்தாலி சென்று பயிற்சி மேற்கொள்ளவும், வீரர்கள் அயர்லாந்து சென்று பயிற்சி மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்தது.

    இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீராங்கனைகள் இத்தாலி சென்றனர். வீரர்கள் இன்று அயர்லாந்து செல்கிறார்கள். வீரர்கள் அங்கு பயிற்சி மேற்கொள்வதுடன் முக்கியமான தொடர்களில் கலந்து கொண்டு சண்டையிட இருக்கிறார்கள்.



    மோரி கோம், மோனிகா, சர்ஜுபாலா, தேவி, பிங்கி ராணி, மீனா மைஸ்னம், சோனியா லாதம், ஷாஷி சோப்ரா, லைஷ்ரம் சரிதா தேவி, பவித்ரா, சிம்ரன்ஜித் கவுர், லாவ்லினா போரோகைன், பூஜா, சவீட்டி போரா, சீமா பூனியா, லால்பாக்மாவி ரால்டே, ஜோதி ஆகிய வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.

    Next Story
    ×