என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி பந்து சிக்சரை ரோகித் பார்க்கவில்லையாம்
Byமாலை மலர்19 March 2018 2:52 PM GMT (Updated: 19 March 2018 2:52 PM GMT)
இறுதி ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் செல்லும் என்று நினைத்து, பேடு அணிய சென்றதால் கடைசி பந்து சிக்சரை பார்க்கவில்லை என்று ரோகித் கூறியுள்ளார். #INDvBAN
இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸ் விளாசியதால் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. கடைசி இரண்டு ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19-வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 22 ரன்கள் விளாசினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்றபோது பதற்றம் அதிக அளவில் காணப்பட்டது. ஒவ்வொருவரும் நகத்தை கடித்துக் கொண்டிருந்தனர்.
சவுமியா சர்கார் வீசிய கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் டீப் கவர் திசையில் சிக்ஸ் அடித்தார். இதனால் இந்திய அணி யுனிட் சந்தோசத்தில் குதித்தார். அனைவரும் பந்தை எந்த திசையில் செல்கிறது என்பதை நுணுக்கமாக பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் சிக்சருக்கு தூக்கியதை நான் பார்க்கவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
போட்டிக்குப்பின் இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி சிக்சரை நான் பார்க்கவில்லை. நான் சூப்பர் ஓவருக்கு தயாரானேன். அதனால் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து எழுந்து பேடு கட்டுவதற்காக டிரெஸ்ஸிங் அறைக்கு நடந்து கொண்டிருந்தேன்.
ஆனால், தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடித்தது மிகப்பெரிய சந்தோசம். அவர் அதிக அளவில் விளையாட போதிலும், அவரது பவரை வெளிப்படுத்தினார்’’ என்றார்.
கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்றபோது பதற்றம் அதிக அளவில் காணப்பட்டது. ஒவ்வொருவரும் நகத்தை கடித்துக் கொண்டிருந்தனர்.
சவுமியா சர்கார் வீசிய கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் டீப் கவர் திசையில் சிக்ஸ் அடித்தார். இதனால் இந்திய அணி யுனிட் சந்தோசத்தில் குதித்தார். அனைவரும் பந்தை எந்த திசையில் செல்கிறது என்பதை நுணுக்கமாக பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் சிக்சருக்கு தூக்கியதை நான் பார்க்கவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
போட்டிக்குப்பின் இதுகுறித்து கூறுகையில் ‘‘நான் தினேஷ் கார்த்திக் அடித்த கடைசி சிக்சரை நான் பார்க்கவில்லை. நான் சூப்பர் ஓவருக்கு தயாரானேன். அதனால் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இடத்தில் இருந்து எழுந்து பேடு கட்டுவதற்காக டிரெஸ்ஸிங் அறைக்கு நடந்து கொண்டிருந்தேன்.
ஆனால், தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடித்தது மிகப்பெரிய சந்தோசம். அவர் அதிக அளவில் விளையாட போதிலும், அவரது பவரை வெளிப்படுத்தினார்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X