search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீநாத், அமித் மிஸ்ரா சாதனையை சமன் செய்ய தவறிய குல்தீப் யாதவ்
    X

    ஸ்ரீநாத், அமித் மிஸ்ரா சாதனையை சமன் செய்ய தவறிய குல்தீப் யாதவ்

    தென்ஆப்பிரிக்கா தொடரில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்திய குல்தீப் யாதவ் ஒரு தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை பெற்றுள்ளார். #SAvIND
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இந்தியா 5-1 எனத் தொடரை கைப்பற்றியது. இந்த தொடர் முழுவதும் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோர் பிரம்மிக்க வைக்கும் வகையில் பந்து வீசினார். இருவரும் இணைந்து 33 விக்கெட்டுக்களை அறுவடை செய்தனர்.

    இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற சாதனையை இருவரும் பிடித்துள்ளனர்.

    இருவரில் குல்தீப் யாதவ் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தால் ஸ்ரீநாத், மிஸ்ரா சாதனையை சமன் செய்திருப்பார்.



    ஸ்ரீநாத் 2002-03 சீசனில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் 7 போட்டிகளில் 18 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். அமித் மிஸ்ரா 2013-ல் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 5 போட்டிகளில் 18 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இந்த சாதனையை குல்தீப் யாதவால் சமன் செய்ய முடியாமல் போய்விட்டது. சாஹல் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தை பிடித்துள்ளார். #SAvIND #GuldeepYadav
    Next Story
    ×