என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜய் ஹசாரே டிராபியில் அசாம் அணியை 279 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது பரோடா
Byமாலை மலர்16 Feb 2018 1:48 PM GMT (Updated: 16 Feb 2018 1:47 PM GMT)
விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அசாம் அணியை 99 ரன்னில் சுருட்டி 279 ரன்கள் வித்தியாசத்தில் பரோடா அணி அபார வெற்றி பெற்றது. #VijayHazareTrophy
விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று ‘ஏ’ பிரிவில் மூன்று போட்டிகள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பரோடா - அசாம் அணிகள் மோதின. டாஸ் வென்ற அசாம் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பரோடா அணியின் தேவ்தார், வாக்மோட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தேவ்தார் 61 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனால் வாக்மோட் 128 பந்தில் 17 பவுண்டரி, 4 சிக்சருடன் 148 ரன்கள் சேர்க்க பரோடா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 378 ரன்கள் குவித்தது.
பின்னர் 379 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அசாம் களம் இறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் அசிஸ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ஷர்மா 22 ரன்னில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினார்கள். இதனால் அசாம் 30 ஓவர்களே தாக்குப்பிடித்து 99 ரன்னில் சுருண்டது. பரோடா 279 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா - ஒடிசா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹரியானா 170 ரன்னில் சுருண்டது. பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஒடிசா 31.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3-வது ஆட்டத்தில் கர்நாடகா - ரெயில்வேஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 257 ரன்கள் எடுத்தது. பின்னர் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ரெயில்வேஸ் 241 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் விக்கெட்டுக்களை இழந்ததால் கர்நாடகா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
‘ஏ’ பிரிவில் பரோடா 6 போட்டியில் 5 வெற்றிகளுடனும், கர்நாடகா 4 வெற்றிகளுடனும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
பின்னர் 379 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அசாம் களம் இறங்கியது. தொடக்க பேட்ஸ்மேன் அசிஸ் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு வீரர் ஷர்மா 22 ரன்னில் ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேறினார்கள். இதனால் அசாம் 30 ஓவர்களே தாக்குப்பிடித்து 99 ரன்னில் சுருண்டது. பரோடா 279 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் ஹரியானா - ஒடிசா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹரியானா 170 ரன்னில் சுருண்டது. பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஒடிசா 31.4 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3-வது ஆட்டத்தில் கர்நாடகா - ரெயில்வேஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா 257 ரன்கள் எடுத்தது. பின்னர் 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ரெயில்வேஸ் 241 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் விக்கெட்டுக்களை இழந்ததால் கர்நாடகா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
‘ஏ’ பிரிவில் பரோடா 6 போட்டியில் 5 வெற்றிகளுடனும், கர்நாடகா 4 வெற்றிகளுடனும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X