என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புரோ கபடி லீக்: குஜராத் அணிக்கு 15-வது வெற்றி
Byமாலை மலர்21 Oct 2017 2:19 AM GMT (Updated: 21 Oct 2017 2:19 AM GMT)
புரோ கபடி லீக் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 23-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 15-வது வெற்றியை ருசித்தது.
புனே :
12 அணிகள் இடையிலான புரோ கபடி லீக் தொடரில் லீக் சுற்று ஆட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் நேற்றிரவு புனேயில் நடந்த 131-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 20-17 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த பெங்கால் வாரியர்ஸ் அணி அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்ட தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-37 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் சமன் செய்தது.
‘பி’ பிரிவில் பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், உத்தரபிரதேச யோத்தா அணிகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்து பிளே-சுற்றுக்குள் நுழைந்தது. அந்த பிரிவில் பெங்களூரு புல்ஸ் 4-வது இடத்தையும், தெலுங்கு டைட்டன்ஸ் 5-வது இடத்தையும், தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடத்தையும் பெற்று வெளியேறியது.
கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 23-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 15-வது வெற்றியை ருசித்தது. ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தன.
12 அணிகள் இடையிலான புரோ கபடி லீக் தொடரில் லீக் சுற்று ஆட்டம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் நேற்றிரவு புனேயில் நடந்த 131-வது லீக் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 20-17 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்த பெங்கால் வாரியர்ஸ் அணி அந்த முன்னிலையை கடைசி வரை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்ட தெலுங்கு டைட்டன்ஸ் அணி 37-37 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் சமன் செய்தது.
‘பி’ பிரிவில் பெங்கால் வாரியர்ஸ், பாட்னா பைரட்ஸ், உத்தரபிரதேச யோத்தா அணிகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்து பிளே-சுற்றுக்குள் நுழைந்தது. அந்த பிரிவில் பெங்களூரு புல்ஸ் 4-வது இடத்தையும், தெலுங்கு டைட்டன்ஸ் 5-வது இடத்தையும், தமிழ் தலைவாஸ் அணி கடைசி இடத்தையும் பெற்று வெளியேறியது.
கடைசி லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 23-22 என்ற புள்ளி கணக்கில் புனேரி பால்டனை வீழ்த்தி 15-வது வெற்றியை ருசித்தது. ‘ஏ’ பிரிவில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் முறையே முதல் 3 இடங்களை பிடித்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X